Monday, 29th April 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிட்லபாக்கத்தில் 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி

செப்டம்பர் 02, 2019 11:34

சென்னை: சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதாநகர் கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கட்டிட கலை நிபுணரான இவர் தீவிர விநாயகர் பக்தர். கடந்த  12 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை அடுத்த சிட்லபாக்கம் காந்தி தெரு ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் 13 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் 12 ஆயிரம் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு கண்காட்சியில் புதிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது ஏழரை அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரதர் விநாயகர் சிலை வைக்கபட்டுள்ளது ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், விநாயகரின் சயன திருக்கோலத்தில் பல்வேறு வடிவங்களில் 200 சிலைகள் இடம் பெற்றுள்ளது 5 அடி உயர தங்க நிற யானையில் விநாயகர் சிவனுக்கு பூஜை செய்யும் சிலை, விநாயகர் அலங்கார சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தனத்தில் செய்யப்பட்ட திண்டு விநாயகர், கண்ணாடி மாளிகையில் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், விநாயகர் திருக்கல்யாணம், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர் சிலைகள், முருகன், பார்வதியுடன் பல்வேறு வாகனங்களில் செல்லும் விநாயகர் சிலைகள் வனத்தில் இருக்கும் விநாயகர் என பல்வேறு வகைகளில் 12 ஆயிரம் விநாயகர் சிலைகள், விநாயகரின் அபூர்வ புகைபடங்கள், வெளிநாடுகளில் உள்ள விநாயகர் கோவில்கள் படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

விநாயகர் சிலை கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இது தொடர்பாக கண்காட்சி அமைப்பாளர் சீனிவாசன் கூறுகையில் விநாயகர் சிலைகள் கண்காட்சி வருகிற 9ந்தேதி வரை நடைபெறுகிறது பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 9 மணி வரை பார்வையிடலாம் என்றார்.

தலைப்புச்செய்திகள்